குழந்தையின்மை காரணத்தால் மனைவியை கொன்ற கணவன் - போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி !!

குழந்தையின்மை காரணத்தால் மனைவியை கொன்ற கணவன் - போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி !!

கொலை

ஆமத்தூரை அடுத்த அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40) இவரின் மனைவி செல்வி (வயது 37). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை கிடையாது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வம் குழந்தை இல்லாததை காரணம்காட்டி மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல நேற்று இரவிலும் மது போதையில் செல்வம், மனைவி செல்வியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கணவன்-மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த செல்வம் வீட்டில் கிடந்த அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். செல்வி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸூக்கு பயந்து செல்வம் கழுத்தறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கொலை குறித்து ஆமத்தூர் போலீஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வத்தை மீட்டு விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த செல்வியின் உடலை, அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story