காமராஜர் நகரில்,மது போதையில் மகனை கொன்ற தந்தை கைது.

கரூர் மாவட்டம் குளத்து பாளையம், பூங்கோடை அருகே காமராஜர் நகரில்,மது போதையில் மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

காமராஜர் நகரில்,மது போதையில் மகனை கொன்ற தந்தை கைது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லை குட்பட்ட, புகலூர் தாலுக்கா, குளத்து பாளையம், பூங்கோடை அருகே உரம்புபாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர், சடையப்பன் மகன் தேவ பிரகாஷ் வயது 21. தந்தை மகன் இருவருமே மது போதைக்கு அடிமையானதால்,மது அருந்துவது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்.

வழக்கம்போல் நேற்று பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 11:20 மணி அளவில் அவர்களது வீட்டின் முன்பு மீண்டும் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சடையப்பன் தனது மகன் என்றும் பாராமல், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தேவ பிரகாஷின் வயிற்றுக்கு கீழ்ப்பகுதியில் கத்தியால் கிழித்துள்ளார்.

இதில் வயிற்றுக்கு கீழே அறுபட்டதுடன், அவருடைய ஆணுறுப்பும் சேதமடைந்தது. சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர், தேவபிரகாஷை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம்,கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு தேவபிரகாசை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த தேவ பிரகாஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, சடையப்பனை கைது செய்து, விசாரணைக்காக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மது போதையில் தந்தையே, தனது மகனை கொன்ற விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story