ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம் - காதலன் போக்சோ சட்டத்தில் கைது !!

ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம் - காதலன் போக்சோ சட்டத்தில் கைது !!

கைது 

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த 18 வயது ஐடிஐ மாணவி விடுதியில் தங்கி அரசு ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லால்குடி அருகே சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் -30 இவர் திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலிப்பதாக பழகியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மாணவியை சமயபுரம் டோல்கேட் அருகே மாருதி நகரில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்று கூல்ட்ரிங்க்ஸில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்து நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர்.

இதனை வெளியில் சொன்னால் இணையதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என காதலன் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் மாணவியின் உடலின் மாற்றம் ஏற்பட்டு கடந்த 31ஆம் தேதி தாய் விசாரித்ததில் மாணவி உண்மையை கூறியுள்ளார். மாத்திரை வாங்கிக் கொடுத்து கருவை கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகாரின் படி லால்குடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் நண்பர்கள் நாலு பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story