கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.

வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.

வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.
வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, முடிகனம் அருகே காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் வயது 50. இவர் அப்பகுதியில் கூலித் தொழில் செய்து வந்தார். அறிவழகன், கடந்த எட்டு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, சிகிச்சை மேற்கொண்ட பிறகும் வயிற்று வலி தீரவில்லை. இதனால், விரக்தி அடைந்த அறிவழகன், டிசம்பர் 18ஆம் தேதி மாலை 3 மணி அளவில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது மகன் நவீன் குமார் வயது 30 என்பவர், தனது தந்தையை உடனடியாக மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அறிவழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக நவீன் குமார், சின்ன தாராபுரம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சின்னதாராபுரம் காவல் துறையினர்.வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story