கொல்லங்கோடு அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
![கொல்லங்கோடு அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு கொல்லங்கோடு அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு](https://king24x7.com/h-upload/2024/06/30/567681-image3a1000999923.webp)
பலியான தொழிலாளி
கொல்லங்கோடு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி ஆட்டோ மோதி உயிரிழந்தார்.
கொல்லங்கோடு அருகே சூழால் கூட்ட வக்கல் விளைவீட்டை சேர்ந்தவர் பாக்கிய நாதன் (73). கூலித் தொழிலாளி.இவர் நேற்று காலை ஊரம்பிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சூழால் பகுதியில் வைத்து காரோடு மணப்பழஞ்சி வீட்டை சேர்ந்த சந்திரன் (63) என்பவர் எதிரே ஓட்டி வந்த ஆட்டோ பாக்கியநாதன் மீது மோதியது.
இதில் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்த வரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு, பாறசாலை அரசு மருத் துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் பாக்கியநா தன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள் ளார்.
இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
Next Story