டூவீலர் மோதியதில் கூலி தொழிலாளி பலி

X
குமாரபாளையம் அருகே டூவீலர் மோதியதில் நடந்து சென்ற கூலி தொழிலாளி பலியானார்
குமாரபாளையம் அருகே டூவீலர் மோதியதில் நடந்து சென்ற கூலி தொழிலாளி பலியானார்
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவாசு பகுதியில் வசிப்பவர் முருகேசன், 40. தானியங்கி தறி கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணியளவில், வேலை முடிந்து, வெப்படை சாலை, ஒட்டன்கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வேகமாக வந்த டி.வி.எஸ். 50 வாகன ஓட்டுனர், இவர் மீது மோதியதில், முருகேசன் பலத்த காயமடைந்தார். இவரை இவரது சகோதரர் சுப்பிரமணி, 43, ஆம்புலன்ஸ் மூலம், குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டிய போது, இவரை பரிசோத்தித்த டாக்டர், இவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர், கல்லங்காட்டுவலசு, கட்டிட கூலித்தொழிலாளி சக்திவேல், 47, என்பவரை கைது செய்தனர்.
Tags
Next Story