தக்கலை அருகே குழந்தைகளை விட்டு விட்டு பணத்துடன் மாயமான இளம்பெண்

தக்கலை அருகே குழந்தைகளை விட்டு விட்டு பணத்துடன் மாயமான இளம்பெண்

மாயமான பெண்

தக்கலை அருகே காதல் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு நகை பணத்துடன் இளம்பெண் மாயமானர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபத்தைச் சேர்ந்த தம்பதி விபின் . இவரது மனைவி நிஷா.இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், விபின் கடன் சுமையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் மிக நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் , வீட்டை விற்று ரூ.18 லட்சம் திரட்டிய விபின், அதனை மனைவியிடம் கொடுத்து விட்டு சென்னைக்கு பணிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தண்டு குழந்தைகளை தனது கணவரின் தாயிடம் கொண்டு விட்டு விட்டு, கோவிலுக்கு செல்வதாக கூறி ரூ.18 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகையுடன் சென்ற நிஷா, மாயமானார்.

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் நிஷா தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை .இதையடுத்து அவரது கணவர் விபின் தக்கலை போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.

Tags

Next Story