சைதாப்பேட்டை மலைப்பகுதியில் பணம் பறிப்பு: 3பேர் கைது

சைதாப்பேட்டை மலைப்பகுதியில் பணம் பறிப்பு: 3பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

சைதாப்பேட்டை மலைப்பகுதியில் வடமாநில வாலிபர்களிடம் பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் சைதாப்பேட்டை மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வடமாநில வாலிபர்கள் 3 பேர் சென்றனர். அவர்கள் மலைமீது நடந்து சென்றபோது, அவர்களை அங்கிருந்த 3 வாலிபர்கள் வழிமடக்கி பணம் கேட்டு மிரட்டினர். அதற்கு அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பீர் பாட்டிலாலும், கத்தியாலும் வடமாநில வாலிபர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து செல்போனையும், பணப்பையையும் பறித்துச் சென்றனர். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டையை சேர்ந்த சதீஷ் (22), சீனிவாசன் (20), கணேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story