குடிபோதையில் காதலனுடன் சேர்ந்து மகன்களை துன்புறுத்திய தாய் கைது

குடிபோதையில் காதலனுடன் சேர்ந்து மகன்களை துன்புறுத்திய தாய் கைது

கைதான பெண்

காஞ்சாம்புறம் பகுதியில் மது போதையில் காதலனுடன் சேர்ந்து மகன்களை சித்திரவதை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் பிரியா. இவருக்கும் பள்ளியாடி பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவர் குமார் வெளிநாட்டிற்கு சென்றார். இந்த நிலையில் பிரியாவுக்கும் கருங்கல் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காஞ்சாம்புறம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

கள்ளக்காதலன் ஜெகனும் பிரியாவும் அடிக்கடி மது அருந்திவிட்டு முதல் கணவருக்கு பிறந்த மூன்று மகன்களையும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுவர்கள் தங்களது பாட்டி லீலாவிடம் இது குறித்து கூறியுள்ளனர்.அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நித்திரவிளை போலீசார் பிரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமுறைவாக உள்ள கள்ளக்காதலன் ஜெகனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story