வாலிபர் கொலை - 3 பேர் கோர்ட்டில் சரண் .

வாலிபர் கொலை - 3 பேர் கோர்ட்டில் சரண் .

குமரியில் வாலிபர் கொலை. 3 பேர் கோர்ட்டில் சரண் .

குமரியில் வாலிபர் கொலை. 3 பேர் கோர்ட்டில் சரண் .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கலைவாணர் நகரை சேர்ந்தவர் சகாயராஜ் மகன் சரண் (25). இவர் கடந்த 24 ஆம் தேதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இது குறித்து கோட்டார் போலீசில் அவரது தாயார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சரணை தேடி வந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் பறக்கைப் பகுதி சேர்ந்த மணிகண்டன் (43) செட்டித்தெருவை சேர்ந்த சீனிவாசன் (43), செந்தூரன் நகரை சேர்ந்த மோகன் (43) ஆகிய மூன்று பேரும் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். சரணை கொலை செய்து வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஓடையில் சாக்கு முட்டையில் கட்டி வீசியதாக அவர்கள் கூறினார்கள். இது குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் எஸ் பி - ன் உத்தரவின் பேரில் நேற்று இரவு அந்த பகுதியில் சென்று பார்த்த போது, அங்குள்ள கால்வாய் ஒன்றில் முழங்கால் அளவு தண்ணீரில் சாக்கு மூடையில் பிணம் மீட்கப்பட்டது.. விசாரணையில் அவர் மாயமான சரண் என்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சரணின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது.

Tags

Next Story