பணியில் இருந்த மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் - போலிசார் வலைவிச்சு !!

பணியில் இருந்த மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் - போலிசார் வலைவிச்சு !!

கொலை

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள நிமா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று (வியாழக்கிழமை) காலை மருத்துவமனைக்கு இருவர் வந்த நிலையில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு இருந்த காரணத்தால் அதற்கான சிகிச்சை (டிரெஸ்ஸிங்) அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவேத் அக்தரை பார்க்க வேண்டுமென சொல்லி உள்ளனர்.

அதன் பின்னர் மருத்துவரின் அறைக்குள் நுழைந்த அவர்கள் ஜாவேத் அக்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளனர். இதனை பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story