கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம் - பேச்சு வார்த்தையில் உடன்பாடு.

கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம் - பேச்சு வார்த்தையில் உடன்பாடு.

கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி போராட்டம் - பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது

கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டி போராட்டம் - பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரியும் தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சேர்ந்த இளைஞருமான நந்தகுமாரை நேற்று பால் வியாபாரம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும்போது முன்று பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நந்தகுமார் உடலை வாங்க மறுத்து பண்டாரம் பட்டி கிராம மக்கள் இன்று இரண்டாவது நாளாக இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான கைது செய்யப்பட்டுள்ள மீள விட்டான் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சிங், மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் குற்றவாளிகள் மீது 30 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், பலியான நந்தகுமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மேலும் இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து பண்டாரம்பட்டி கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களுடன் உதவி ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் கிராம மக்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார் இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பண்டாரம்பட்டி கிராம மக்கள் பலியான நந்தகுமாரின் உடலை பெற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story