படித்தது பத்தாம் வகுப்பு, பார்த்தது மருத்துவம் - போலி டாக்டர் கைது

படித்தது பத்தாம் வகுப்பு, பார்த்தது மருத்துவம் - போலி டாக்டர் கைது

போலி டாக்டர் கைது 

ராணிப்பேட்டை அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த கொளத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (37) இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு அம்மூர் பகுதியில் சக்தி ஹெல்த் கேர் என்ற பெயரில் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார் இது குறித்து இணை இயக்குனர் சுகாதாரப் பணிகளுக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் சக்திவேல், மருந்து ஆளுநர் வேலு, வருவாய் துறையினர், மற்றும் காவல் துறையினர் இணைந்து சக்தி ஹெல்த் கேர் சென்டரில் ஆய்வு மேற்கொண்டனர் .

ஆய்வில் மாதவன் சட்டத்துக்கு புறம்பாக கிளினிக் நடத்தி அதில் ஆங்கில மருந்துகள் மற்றும் ஊசி ஆகியவை வைத்திருப்பதும் பொதுமக்களுக்கு பயன்படுத்துவதும் தெரியவந்தது இதனை எடுத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கிளினிக் சீல் வைத்த மருத்துவ அதிகாரி மருந்து மற்றும் ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் மாதவனை ராணிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர் மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மாதவன் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இது போன்ற வழக்கில் மாதவன் மூன்றாவது முறையாக கைதாகுவது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story