சாமியார்மடத்தில் விவசாய நிலத்தில் திடீர் தீ விபத்து

சாமியார்மடத்தில் விவசாய நிலத்தில் திடீர் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள்

சாமியார்மடம் பகுதியில் விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து. விரைந்து தீயை அணைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட11வது வார்டு ஆயன்விளை பகுதியில் விவசாய நிலங்களில் தீ பரவியது இதைப் பார்த்த அந்தப் பகுதியை சார்ந்த பொதுமக்கள் பேரூராட்சித் தலைவர் ஜான் டென்சிங்கிடம் தகவல் கொடுத்தனர்.

அவர் இது குறித்த உடனடியாக தக்கலை தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் தக்கலை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் தக்கலை காவலர்கள் விரைந்து செயல்பட்டு வேகமாக பரவிய தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story