சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி

சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி

திருச்செந்தூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருச்செந்தூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். 
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வாய்க்கால் தெருவை சேர்ந்த சுடலை மகன் சண்முகமூர்த்தி (43). அவர் டீக்கடை ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலையில் முக்காணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அடைக்கலாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் இவரது மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சண்முகமூர்த்தி ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் அவைர மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் மற்றும் அதை ஓட்டிச்சென்றவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story