பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை - போச்சம்பள்ளி அருகே சோகம்

பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை - போச்சம்பள்ளி அருகே சோகம்

கடலரசு குடும்பத்தினர் 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் கடலரசு என்பவருக்கும் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு திவான் ராஜ் என்ற மகனும், நிவன்திக்கா என்ற மகளும் உள்ளனர். இதில் திவான் ராஜ் தட்டக்கல் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஜனனிக்கும் கடலரசுக்கும் இடையே குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னால் ஜனனி கனவனுடன் சண்டையிட்டுக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. கணவன் மனைவி இருவர் குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்.தட்டக்கல் கிராமத்தில் ஜனனி அவரது கணவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர்களது வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய மலை தீர்த்தம் கோவிலுக்கு சாமி கும்பிட குழந்தைகளுடன் சென்றனர். இந்நிலையில் கோயிலுக்கு மேலே செல்லும் பொழுது கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் குழந்தைகளுக்கு விஷம் கலந்து தந்தை கடலரசு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் அங்கேயே துடி துடித்து மயங்கிய நிலையில் இருந்தனர். குழந்தை இறக்கவில்லை என எண்ணிய கடலரசு இரண்டு குழந்தைகளையும் மீண்டும் மீண்டும் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் மனைவி ஜனனிக்கும் விஷம் கொடுத்து விட்டு அவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் ஜனனி சத்தம் போடவே அந்த அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த இரண்டு குழந்தைகளின் சடலங்களையும் மீட்ட நாகரசம்பட்டி போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப்பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story