ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்த இளைஞர் சேலம் ஏற்காடில் என்ன நடந்தது ! | CRIME | KING NEWS 24x7

ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்த இளைஞர் சேலம் ஏற்காடில் என்ன நடந்தது ! | CRIME | KING NEWS 24x7
X

சேலம் 

ஏற்காட்டில், கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று இளம் பெண் ஒருவர் மயக்க மருந்து செலுத்தி மலைப் பகுதியில் இருந்து துாக்கி எறியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக, பொறியியல் மாணவர் ஒருவர், பெண் ஐடி ஊழியர் ஒருவர், ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர், மூன்று பெண்களையும் (கொலை செய்யப்பட்ட பெண், கைது செய்யப்பட்ட பெண்கள்) காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதோடு, விஷ ஊசி போட்டு அப்பெண் கொலை செய்யப்பட்டதாகப் பரவியுள்ள தகவலை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.


20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில், கடந்த புதன்கிழமையன்று 20 அடி பள்ளத்தில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் உடலுக்கு அருகிலிருந்த கைப்பையில் ஓர் அடையாள அட்டை, பான் கார்டு, தனியார் பெண்கள் விடுதியில் பணம் செலுத்தியதற்கான ரசீது, 200 ரூபாய் பணம் இருந்துள்ளது.

அவற்றில் இருந்து, இறந்து கிடந்தவர் சேலத்திலுள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் பணியாற்றும் ஆசிரியர் லோகநாயகி (வயது 35) என்பது தெரிய வந்தது.

மேலும் சேலத்தில் இவர் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர் இவரைக் காணவில்லை என்று அவர் ஏற்காடு சென்ற மறுநாளே பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது தெரிய வந்ததாக ஏற்காடு நகர கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.







Next Story