சாத்தான்குளம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை: கணவர் தற்கொலை

சாத்தான்குளம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை: கணவர் தற்கொலை

இறந்த பெண்

சாத்தான்குளம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் மகன் பிரபாகர் பீம்சிங் (45). இவரது மனைவி ஆஷா (33). இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடன் பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரபாகர் பீம்சிங், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக திங்கள்கிழமை இரவு பிரபாகருக்கும், மனைவிக்கு ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த பிரபாகர் மனைவியை அரிவாளால் கழுத்தை கொலை செய்ததும், செவ்வாய்க்கிழமை காலை பிரபாகர் வீட்டில் இருந்து வெளியே வந்து தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த விஷம் மருந்தை எடுத்து,

வந்து மனைவி இறந்த துக்கத்தில் தானும் விஷம் குடித்து கதவை பூட்டி மனைவி அருகில் படுத்து இறந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் வீட்டின் அருகில் கிடந்த கார் கதவை திறந்து பார்த்தபோது விஷமருந்து பாட்டில் மற்றும் அரிவாளை கைப்பற்றினர்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story