கார் மோதி பெண் சாவு - போலீசார் விசாரணை

கார் மோதி பெண் சாவு - போலீசார் விசாரணை

அயோத்தியாப்பட்டணம் அருகே கார் மோதி பெண் சாவு - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அயோத்தியாப்பட்டணம் அருகே கார் மோதி பெண் சாவு - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 45). இவர் அயோத்தியாப்பட்டணம் அருகே குள்ளபட்டி சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கி எதிரே அரூர் - அயோத்தியாப்பட்டணம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அரூர் பகுதியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நோக்கி வந்த கார், தனலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தனலட்சுமியை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி உயிர் இழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் அருள்குமார் (27) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி மீது மோதிய கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story