பேராவூரணியில் திமுக கொடியேற்று விழா 

பேராவூரணியில் திமுக கொடியேற்று விழா 

பேராவூரணியில் திமுக கொடியேற்று விழா 

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழகப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகரம், 9 ஆவது வார்டு, டாக்டர் காந்தி மருத்துவமனை அருகே, திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலர் க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சியினர், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அயலக அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஷாஜகான் செய்திருந்தார்.

Tags

Next Story