மணக்க மணக்க வாழைப்பூ உருண்டை குழம்பு !!

மணக்க மணக்க வாழைப்பூ உருண்டை குழம்பு !!

 வாழைப்பூ உருண்டை குழம்பு

பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும். குடல் புண் ஆறும்.


தேவையானவை :


வாழைப்பூ -1

துவரம் பருப்பு - 100 கிராம்

கடலை பருப்பு - 4 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

கடுகு வெந்தயம் - தாளிக்க

சாம்பார்தூள் - 2 ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

*வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

*துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

* வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

*புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து சாம்பார்தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவைத்த உருண்டைகளை போட்டு கொதிக்க வைக்கவும்.

*கொதிக்க வைத்ததை இறக்கி மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

*சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு தயார்.

Tags

Next Story