வாரத்திற்கு 3 முறை சாப்பிட வேண்டிய 3 காய்கறிகள்!!!

வாரத்திற்கு 3 முறை சாப்பிட வேண்டிய 3 காய்கறிகள்!!!

காய்கறிகள்

காய்கறிகள் சாப்பிடுவது என்றாலே நம்மில் பலருக்கும் பிடிக்காது. ஆனால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு காய்கறிகள் மிக அவசியம்.

1.​வெண்டைக்காய்: வெண்டைக்காய் என்றாலே அது வழவழவென்று இருக்கும் என்று குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது மூளை வளர்ச்சிக்கு மட்டுமின்றி உடலில் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது. நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது மிகச்சிறந்த ப்ரீ - பயாடிக் உணவாகவும் இருக்கிறது. ஃபோலேட்டும் இதில் அதிகம். இந்த ப்ரீ பயாடிக் பண்புகளால் பெருங்குடலில உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தூண்டப்படும். உடலில் பி - காம்ப்ளக்ஸ் உற்பத்தியும் அதிகரிக்கும்.குறிப்பாக பெண்கள் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாக வெண்டைக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கு பிறப்புக் குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும். வெண்டைக்காயை வாரத்தில் 2-3 நாட்கள் எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

2.​பரங்கிக்காய் (எ) மஞ்சள் பூசணிக்காய்: வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது எடுத்துக் கொள்ள வேண்டிய மற்றொரு காய்கறிகளில் ஒன்று மஞ்சள் பூசணி என்னும் பரங்கிக்காய்.பொட்டாசியம் அதிகமாக உள்ள இந்த பூசணிக்காய் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கான சிறந்த மருந்து என்று சொல்லலாம். இதிலுள்ள லூடின் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு மூலக்கூறுகளும் கண்புரை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. இதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமே இதிலுள்ள பீட்டா கரோட்டீன் தான். இதுதான் உடலில் வைட்டமின் ஏ - வாக மாறுகிறது. இது நம் கண்களில் ஆரோக்கியத்துக்கு மிக மிக நல்லது.

3.பாகற்காய்: பாகற்காய் என்றாலே அது சர்க்கரை வியாதிக்காரர்கள் சாப்பிடும் காய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தையிலேயே இந்த காயை பழக்கப்படுத்தாமல் விடுவதால் பெரியவர்கள் ஆனபிறகும் நிறைய பேர் பாகற்காயை பார்த்தாலே ஓடிவிடுவார்கள். ஆனால் அதில் பல அற்புதங்கள் இருக்கிறது.இந்த பாகற்காயை எடுத்துக் கொள்வதால் வாய் புற்றுநோய் வருவதைத் தடுக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.பாகற்காய்க்கு ஆன்டி டயாபடீக் பண்புகள் உண்டு. அணுக்களுக்கும் தசைகளுக்கும் குளுக்கோஸை அனுப்புவது, இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுவது ஆகியவற்றை செய்யும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் சமயத்திலும் பாகற்காயை எடுத்துக் கொள்ளக் கூடாது.

Tags

Next Story