கருவளையங்கள் மாயமாய் மறைய...எளிய வீட்டு வைத்தியங்கள்!!

கருவளையங்கள் மாயமாய் மறைய...எளிய வீட்டு வைத்தியங்கள்!!

கருவளையங்கள் 

மன அழுத்தம், தூக்கமின்மை, தவறான வாழ்க்கை முறை, நீர் சத்து குறைதல்,ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றன. கருவளையங்கள் முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, வயதான தோற்றத்தையும் கொடுக்கும்.உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு கருவளையத்தில் தடவி, வர நல்ல பலன் கிடைக்கும்.குளிர்ச்சியான டீ பைகளை தண்ணீரில் நனைத்து, சிறிது நேரம் பிரீசரில் வைக்கவும். அதன் பிறகு கண்களை மூடி அந்த டீ பேக்கை கருவளையத்தில் வைத்து வர நல்ல பலன் தெரியும்.ஆரஞ்சு சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள் கலந்த கலவையை கருவளையங்கள் மீது தடவி வருவதன் மூலம், கருவளையங்கள் படிப்படியாக குறையும். மேலும், இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது.குளிர்ச்சியான பாலை பருத்தி துணியில் ஒத்தி எடுத்து, கண்களின் கருவளையத்தில் மீது வைப்பது பலன் தரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.கருவளையங்கள் நீங்க ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையங்கள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் சுத்தம் செய்தால், நல்ல பலன் காணலாம். மன அழுத்தம், தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள்,ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது. இந்நிலையில் தினமும் யோகா மற்றும் தியானம் கருவளையங்களை நீக்க உதவும்.

Tags

Next Story