உடல் உறுப்புகளைப் போல வாயையும் டீடாக்ஸ் பண்றது ரொம்ப முக்கியம்!!!

உடல் உறுப்புகளைப் போல வாயையும் டீடாக்ஸ் பண்றது ரொம்ப முக்கியம்!!!

டீடாக்ஸ்

நம்முடைய உடல் இயக்கத்துக்கு அடிப்படைத் தேவையான காற்று, உணவு, தண்ணீர் என முக்கியமான விஷயங்கள் வாய் வழியே உடலுக்குள் செல்கின்றன. வாயை ஆரோக்கியமாகவும் நச்சுக்கள் இல்லாமலும் வைத்திருக்க இயற்கையான சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

1.ஆயில் புல்லிங்: ஆயில் புல்லிங் செய்வது வாய் ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியம். வாயில் தினமும் காலை பல் துலக்கியதும் ஆயில் புல்லிங் செய்து வர, வாய் ஆரோக்கியம் மேம்படும். ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். இது பற்களில் உள்ள அழுக்குகள் கிருமிகள், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றை அழிக்கும். வாயை டீடாக்ஸ் செய்யும்.

2.​நாக்கு சுத்தம் செய்தல்: தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்க நாம் யாரும் மறப்பதில்லை. ஆனால் பல் துலக்கியதும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடுகிறோம். நம் வாய் ஆரோக்கியம் கெட்டுப் போவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று வாயை சுத்தம் செய்யாதது தான். தினமும் பல் துலக்கியவுடன் நாக்கை டங் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு, வாய் கொப்பளிக்க மறக்கக் கூடாது.

3. ஈறு மசாஜ்: ஈறுகளை நாம் கட்டாயம் மசாஜ் செய்ய வேண்டும். அதேபோல வெறும் விரல்களால் ஈறுகளைத் தேய்த்துக் கொடுப்பதை விட சில எசன்ஷியல் ஆயில்கள் கொண்டு மசாஜ் செய்யலாம். இதற்கு டீ ட்ரீ ஆயில் பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. டீ ட்ரீ ஆயிலில் ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி வைரல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அதேபோல வேப்ப எண்ணெயும் பயன்படுத்தலாம்.

4.​மௌத்வாஷ்: மௌத்வாஷ் எதற்கு பயன்படுத்துவது என்று தெரியாமலே பயன்படுத்துகிறோம். பல் விளக்க முடியாத சமயங்களில், வாய் துர்நாற்றம் வீசும்போது மட்டும் மௌத்வாஷை பயன்படுத்துகிறோம். காலை பல் துலக்கிய பிறகு மௌத்வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிக்க வேண்டும். பெரும்பாலான மௌத்வாஷ்களில் புதினா உள்ளிட்ட மௌத் ஃபிரஷ்னர்கள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்பட்டு இருக்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி, புத்துணர்ச்சியைக் கொடுக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்களும் அழிந்து போகும்.

Tags

Next Story