பால் டீ குடிப்பதன் பக்கவிளைவுகள் !!!

பால் டீ குடிப்பதன் பக்கவிளைவுகள் !!!

பால் டீ குடிப்பதன் பக்கவிளைவுகள்

உலக அளவில் இந்தியர்கள் தான் மிக அதிகமாக பால் சேர்த்த டீ குடிக்கிறார்கள். டீ சோர்வாக இருக்கும்போது புத்துணர்ச்சி தரும் பானம்.

ஆனால் அதே டீயை நிறைய குடிக்கும்போது உடலில் பக்க விளைவுகள் உண்டாகும். டீ குடிப்பது என்பது சிலருக்கு உற்சாக பானம்.

சிலருக்கோ டீ என்பது ஒருவகை எமோஷன் என்று சொல்வார்கள். அப்போது தான் டீ குடித்து முடித்திருப்பார்கள்.

அடுதத நிமிடமே நண்பர்கள் யாராவது கூப்பிட்டால் உடனே திரும்பவும் டீ குடிப்பார்கள். இப்படி அடிக்கடி பால் சேர்த்த டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகக் கேடு.

இதனால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

டீ திரவ உணவு தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதிகமாக பால் சேர்த்த டீ குடிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும்.

இதனால் உடல் வறட்சி அடைந்து மலக்கட்டு பிரச்சினைகள் ஏற்படும். உடல் கழிவுகள் முறையாக வெளியேறாமல் மலச்சிக்கலால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

டீ அதிகமாகக் குடிக்கும் போது உடலில் பதட்டம் அதிகரிக்கும். ஏற்கனவே மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் அதிகமாக டீ குடிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

பால் சேர்த்த டீ அதிகமாக குடிப்பவர்களுக்கு தூக்க சுழற்சி முறை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகோ, தூங்கச் செல்வதற்கு சிறிது நேரம் முன்போ டீ குடிக்கும் போது இந்த பிரச்சினை அதிகமாகும்.

டீயில் உள்ள காஃபைன் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்சினைக்குக் காரணமாக அமைகிறது.

அடிக்கடி டீ குடிப்பவர்களுக்கும் அதிகமாக டீ குடிக்கிறவர்களுக்கும் ரத்த அழுத்தம் சீராக இருப்பதில்லை.

திடீரென உயர்வது, திடீரென குறைவது என மாறி மாறி இருக்கும். ரத்த அழுத்தம் சீராக இல்லாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியும்.

அதனால் அதிகமாக டீ குடிக்கும் நபராக இருந்தால் கட்டாயம் குறைத்துக் கொள்ளுங்கள். பால் சேர்த்த டீ குடிப்பது நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.

தேயிலையில் உள்ள அதிகப்படியான காஃபைன் உடலில் உள்ள டீஹைட்ரேஷனை ஏற்படுத்தும். அதிலும் அதிகமாக டீ குடிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை கட்டாயம் இருக்கும்.

நிறைய பேர் தலைவலித்தால் உடனே டீ குடிப்பார்கள். ஆனால் டீ அதிகமாகக் குடிப்பது தான் உங்கள் தலைவலிக்குக் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் தான் நமக்கு தலைவலியே உண்டாகிறது. அந்த நேரத்தில் டீ குடிப்பதால் தலைவலி இன்னும் அதிகரிக்கும்.

சில உணவுகளை சாப்பிட்டதும் எப்படி வயிறு உப்பசம் உண்டாகிறதோ அதேபோல அதிகமாக டீ குடிக்கும்போதும் உண்டாகும்.

குறிப்பாக டீயில் பால் சேர்க்கும்போது அது அசிடிட்டியை ஏற்படுத்தும். இது வயிறு அசௌகரியம் மற்றும் வயிறு உப்பசத்தை ஏற்படுத்தக் கூடும்.

Tags

Next Story