திக்குவாய் பிரச்சனைக்கு தீர்வு !

திக்குவாய் பிரச்சனைக்கு தீர்வு !

திக்குவாய் பிரச்சனை

திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது.

எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை.

ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும்.

பழக்கத்தின் காரணமாகவும் குழந்தை பருவத்தில் திக்குவாய் உருவாகி பின் வாழ்க்கை முழுவதும் தொடரலாம்.வீட்டில் தாத்தா,பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்து தானும் திக்கித்திக்கி பேச கற்றுக் கொண்டு விடும்.

திக்குவாய் குணமாகக் கூடிய ஓர் உளவியல் பிரச்சனை.

குழந்தைகளுக்கு திக்குவாய் உள்ளது என்பதை கனக்குத்த கண்டறிந்து கொண்டால் உடனே உளவியல் வேண்டும் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய பக்கங்கன குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை என வேண்டு சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால் போது உடனே அதை திருத்தி நன்றாக பேச செய்ய கற்பணை வேண்டும். அதட்டிப் பேசாமல் அன்புடன் இதைச் செய்வது நன்று. அத்தகைய குழந்தைகளை பயிற்சி பெற்றோர் தம் முன்னிலையில் பிறரிடம் பேச வைக்க வேண்டும். அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பிறரிடம் பயமின்றி உரையாட பெற்றோர் உதவ வேண்டும்.

திக்குவாய் குறையை குழந்தை முன்னிலையிலேயே அனைவரிடமும் சொல்லி கவலைப்படுவதை தவிர்ப்பது நன்று. மேலும் குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுப்பது, தலையை தடவுவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு திக்குவாய் பட்டுக இருப்பின் அவர்களும் இக்குறையை போக்கிக் கொண்டு நன்றாக பேச முடியும்

இவர்கள் முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித மனப்பதட்டமும் இல்லாத நிலையில் என்னால் பிறர் முன்னிலையில் திக்காமல் தெளிவாக பேச முடியும் என்று தனக்குத்தானே சுய கருத்தேற்றம் செய்து கொள்ள ஏதாவது ஒரு புத்தகத்தில் ஐந்து த்தகை பக்கங்களை மிக மிக மெதுவாக ஒரு ஸ்டூலின் மீது உடா ஏறி நின்று காலையிலும் மாலையிலும் படித்து வர ல என வேண்டும்.

இவ்வாறு ஸ்டூலின் மீது ஏறி நின்று படிக்கும் பேசினா போது முன்னால் நிறைய பேர் அமர்ந்திருப்பதாக செய் கற்பனை செய்து கொண்டு படிக்க வேண்டும்.

இதை திக்குவாய் உள்ளவர்கள் மேற்கண்ட பயிற்சிகளோடு 'எனக்கு உள்ள திக்குவாய் பிரச்சனையிலிருந்து நான் வெளிவந்தே தீருவேன்' என்று மனதினுள் வைராக்கியம் கொள்ள வேண்டும்.

Tags

Next Story