மதியம் சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்!!!

மதிய உணவை சாப்பிட்ட பிறகு சிறிது ஓய்வெடுக்க விரும்புவது இயல்பானது. இருப்பினும், சாப்பிட்ட பிறகு நல்ல செரிமானம் அடைய சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். 1. புகைபிடித்தல்: புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைபிடித்தல் வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கலாம். புகைபிடிக்க வேண்டும் என்றால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 1-2 மணிநேரம் காத்திருப்பது நல்லது. 2. இனிப்பு: எப்போதாவது இனிப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது என்றாலும், சாப்பிட்ட உடனேயே இனிப்புகளை எடுப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். 3. தூக்கம்: சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு தான். அனால் அது செரிமான செயல்முறைக்கு எதிராக வேலை செய்யும். சாப்பிட்ட பிறகு தூக்கம் வந்தால் படுப்பதற்குப் பதிலாக நிமிர்ந்து உட்கார்ந்து அல்லது நடக்க முயற்சிக்கவும். 4. குளிர் பானங்கள்: மதியம் சாப்பிட்ட உடன் குளிர் பானங்களை குடிக்க கூடாது. இந்த குளிர் பானங்கள் உங்கள் வயிற்றில் உள்ள இரத்த நாளங்களை கட்டுப்படுத்தலாம். எனவே அவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். 5. உடற்பயிற்சி: சாப்பிட்ட பிறகு உடனடியாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது, இது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். உடற்பயிற்சியில் ஈடுபட சாப்பிட்ட பிறகு 2 முதல் 3 மணி நேர இடைவேளி அவசியம்.

Tags

Next Story