கேதார்நாத்தில் 228 கிலோ தங்கம் காணவில்லை, இதுவரை விசாரணை எதுவும் தொடங்கப்படவில்லை!

கேதார்நாத்தில் 228 கிலோ தங்கம் காணவில்லை, இதுவரை விசாரணை எதுவும் தொடங்கப்படவில்லை!

அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி

கேதார்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகிவிட்டதாக ஜோதிர்மட சங்கராச்சாரியார் திடுக்கிடும் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டில் உள்ளஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று மும்பை வந்திருந்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவபுராணத்தில் 12 ஜோதிர்லிங்க தலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. இதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பற்றிய குறிப்புகளும் உள்ளன. எனவே அதேபோன்ற கோயிலை வேறு இடத்தில் எழுப்ப முடியாது. கேதார்நாத் கோயில் கருவறை சுவர்களில் தங்கத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. இதில் 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


Tags

Next Story