வெட்டவெளிச்சத்திற்கு வந்த பாஜக முறைகேடு ! ஆம் ஆத்மி வெற்றி!

வெட்டவெளிச்சத்திற்கு வந்த பாஜக முறைகேடு ! ஆம் ஆத்மி வெற்றி!

உச்ச நீதிமன்றம் 

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக முறைகேடு செய்ததாக ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்த நிலையில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவை சட்டவிரோதம் எனக் கூறி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணியில் 8 ஓட்டுகள் செல்லாது எனக் கூறி பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதனை கண்டித்து பாஜக முறைகேடு செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு முன்பே பாஜக மேயர் திடீரென தனது ராஜினாமா செய்தார்

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான தேர்தல் நடத்தும் அதிகாரி 8 வாக்கு சீட்டுகளில் எக்ஸ் எனக் குறிப்பிட்டதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு செய்து பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story