அதானி நிறுவன ஊழல் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு விசாரணை - ராகுல் காந்தி

அதானி நிறுவன ஊழல் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு விசாரணை - ராகுல் காந்தி

ராகுல் காந்தி 

அதானி நிலக்கரி இறக்குமதி ஊழல் மூலம் மோடியின் நண்பரான அதானி ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலை உயர்த்தி விற்றதன் மூலம் கொள்ளை லாபம் அடித்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும் நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக எத்தனை டெம்போக்களில் பணம் பெற்றார் மோடி எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி நிறுவன இறக்குமதி ஊழல் மீது சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அமையும் அரசு விசாரணை நடத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story