கேரளாவில் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

கேரளாவில் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

பினராயி விஜயன்

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

கேரளாவில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட உறுதியோடு நிற்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் குறித்து கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags

Next Story