திருப்பதி பிரமோற்சவ விழா; மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை!!

திருப்பதி பிரமோற்சவ விழா; மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை!!

Tirupati 

திருப்பதியில் கருட சேவையையொட்டி 7 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 ஆம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 4-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது. 12-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அளிக்கிறார். விழாவில் 8-ந் தேதி கருட சேவை நடக்கிறது. கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கேலரிகள் வசதி செய்யப்படுகிறது. மேலும் பிரத்யேக வாசல்களும் அமைக்கப்படுகின்றன. முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கருட சேவையையொட்டி 7-ந் தேதி இரவு 9 மணி முதல் 9-ந் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று இரவு கருட சேவை நடந்தது. நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 78,690 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 86 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ. 4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story