அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி, தேர்தல் நேரம் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட வேண்டுமா? என்பது குறித்து விளக்கவும், அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story