"பாஜக சதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்" - டெல்லி அமைச்சர் எச்சரிக்கை !

பாஜக சதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள் - டெல்லி அமைச்சர் எச்சரிக்கை !

அதிஷி

தேர்தல் நேரத்தில் டெல்லிக்கு செல்லும் யமுனை நீரை ஹரியானா அரசு தடுத்து பற்றாக்குறையை ஏற்படுத்தி ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்துள்ளதாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த டெல்லி அமைச்சர் அதிஷி, ''டெல்லி மாநில மக்கள் 7 தொகுதிகளையும் இந்தியா கூட்டணிக்கு வழங்க முடிவு செய்து விட்டார்கள். இதனால்தான் பாஜக தற்போது அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைக் குறிவைத்து டெல்லி மக்களைத் தொந்தரவு செய்ய பாஜக புதிய சதித்திட்டத்தைத் தீட்டி வருகிறது. அதன்படி ஹரியானா அரசின் மூலம், டெல்லிக்குத் தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தியுள்ளது. பாஜக சதியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்'' என டெல்லி மக்களை எச்சரித்தார்.

மேலும் தேவைப்பட்டால் உடனடியாக ஹரியானா அரசுக்குக் கடிதம் எழுதுவோம் என்றும், நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றும் அதிஷி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story