அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளிப்படைத் தன்மை விதிகளை மீறியது கண்டுபிடிப்பு!

அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளிப்படைத் தன்மை விதிகளை மீறியது கண்டுபிடிப்பு!

அதானி

அதானி குழுமத்தின் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளிப்படைத் தன்மை விதிகள் மற்றும் முதலீட்டு வரம்புகளை மீறியதாக SEBI கண்டறிந்துள்ளது.

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிதிகளில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதமே, அதானி குழும நிறுவனங்களில் விதிகள் மீறப்பட்டு இருப்பதை SEBI கண்டுபிடித்ததாக, Reuters செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதானி குழுமத்தின் ஏறக்குறைய 10 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதி மீறல்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு SEBI நோட்டீஸ் அனுப்பி இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

Tags

Next Story