காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை

காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை

பிரதமர் மலர் தூவி மரியாதை

காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.30) தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “பாபுவின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், நமது தேசத்துக்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்துக்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story