EMI முறையில் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள்! குஜராத்தில் அதிர்ச்சி!

EMI முறையில் லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகள்! குஜராத்தில் அதிர்ச்சி!

லஞ்சம்

குஜராத்தில் EMI முறையிலான லஞ்சம் வசூலிக்கும் நடைமுறை மிகவும் பொதுவானதாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் ஊழல் தடுப்புப் பணியகம் இந்த ஆண்டு மட்டும் இதுத் தொடர்பான 10 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குகளில் GST-யில் மோசடி செய்ய சுமார் 21 லட்சம் ரூபாய் லஞ்சத்தை 10 தவணைகளாக கொடுக்க சொல்லியது மற்றும் நிலப் பிரச்சனையை தீர்க்க ஒரு விவசாயிடம் 85,000 ரூபாய் லஞ்சத்தை 3 தவணைகளாக அரசு அதிகாரிகள் கொடுக்க சொல்லியதும் அடங்கும்.

குஜராத்தில் ஊழல் வழக்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன; இதுவரை 86 போலீசார் லஞ்சம் பெற்ற வழக்குகளில் சிக்கியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5-வது ஆண்டாக லஞ்ச வழக்குகளில் முன்னணி அரசுத் துறையாக குஜராத் காவல்துறை இருந்து வருகிறது.

Tags

Next Story