பிரதமர் மோடிக்கு ஆளுநர் மாளிகை வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு ஆளுநர் மாளிகை வாழ்த்து!

 மோடி - ஆர்.என்.ரவி 

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பான எக்ஸ் பதிவில், ''தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சியடைந்தபாரதத்தை கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி அவர்கள் தனது 3வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள். தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும் மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story