ஆந்திராவில் ஒரே நொடியில் முடிந்த கொண்டாட்டம் !

ஆந்திராவில் ஒரே நொடியில் முடிந்த கொண்டாட்டம் !

டிராக்டர் 

ஆந்திராவில், தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது டிராக்டர் மோதி ஒருவர் காயமடைந்தார். மேற்கு கோதவரி மாவட்டம், மல்பூர் கிராமத்தை சேர்ந்த தொண்டர்கள், டிராக்டரில் கட்சிக்கொடியை கட்டி, டிராக்டரை முன்னும் பின்னும் வேகமாக ஓட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது தொண்டர் ஒருவர், கட்சிக்கொடியை கையில் பிடித்தபடி டிராக்டர் பின்னால் சென்றார். இதை ஓட்டுநர் கவனிக்காத நிலையில், ரிவர்ஸ் எடுத்தபோது டிராக்டர் மோதி தொண்டர் கீழே விழுந்தார். இதில், கால்கள் டிராக்டர் சக்கரங்களுக்கு இடையே சிக்கி பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story