பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்ததாக தகவல்!

பிரதமர் மோடி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்ததாக தகவல்!

பிரதமர் மோடி

இந்திய மீன்பிடி கப்பல் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா‌ நேற்று கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கை செல்வதாக இருந்த தனது திட்டத்தை இந்திய பிரதமர் மோடி ரத்து செய்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.

இருப்பினும் இந்திய அரசாங்கத்தரப்பு இன்னும் இதனை உறுதிச்செய்யவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதன்போது இலங்கையில் சில அபிவிருத்தி திட்டங்களை அவர் ஆரம்பித்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் தற்போதைய உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள இந்திய கடற்றொழிலாளரின் மரணச் சம்பவம் என்பவற்றை தொடர்ந்தே பிரதமரின் பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story