ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது!

ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது!

விவசாயிகளின் முற்றுகை போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பஞ்சாபிலிருந்து டெல்லி சலோ பேரணியைத் தொடங்கினர். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்பட பல மாநில விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து டெல்லி எல்லையில் காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகளைத் தகர்த்தெறிய ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விவசாயிகள் புறப்பட்டனர். மேலும் பாதுகாப்பு தீவிரமடைந்துள்ளதால் ரயிலில் சிலர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story