கர்நாடகா - பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

கர்நாடகா - பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

லிங்காயத்-பஞ்சமசாலி 

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம் மட்டுமே பஞ்சமசாலி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

லிங்காயத் சமூகத்தினரிடையே பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட பஞ்சமசாலி உட்பிரிவினர் கர்நாடகாவில் சுமார் 80 லட்சம் பேர் வசிப்பதாக கூறப்படுகிறது.

ஓட்டுக் கேட்டு பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழையக் கூடாது என பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் வசனானந்த சுவாமி தடை விதித்துள்ளார்.

Tags

Next Story