வயநாட்டில் நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 316 ஆக உயர்வு

வயநாட்டில் நிலச்சரிவு- உயிரிழப்பு எண்ணிக்கை 316 ஆக உயர்வு

நிலச்சரிவு

கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளனர் .

316 பேரின் சடலங்கள் இதுவரை மீட்புகப்பட்டுள்ளனர். 240 பேரை காணவில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.

நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் . முண்டக்கை கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரு பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ராணுவத்தினர் தேடுதல் பணியில் இஸ்ரோவும் இணைந்துள்ளது. அதிநவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது ராணுவம். அதே வேளை நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியில், RISAT SAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களையும் ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இஸ்ரோ அளித்த தகவலின்படி கடந்த முறை ஏற்பட்ட நிலச்சரிவை விட இது பல மடங்கு பெரிய நிலச்சரிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலச் சரிவு ஆரம்ப புள்ளியில் இருந்து 8 கி.மீ. பயணித்து முடிந்திருக்கிறது என இஸ்ரோ கண்டறிந்துள்ளது.

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

நிலச்சரிவு பாதிப்பு குறித்து விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்ய கேரள அரசு தலைமைச் செயலாளர் நேற்று தடை விதித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story