பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்: அமித்ஷா!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்: அமித்ஷா!

அமித்ஷா

பீஹார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஓட்டு வங்கியைக் கண்டு பா.ஜ., பயப்படுவதில்லை. இரண்டு தடுப்பூசிகளை வழங்கி, கொரோனா காலத்தில் மக்களின் உயிரை பிரதமர் மோடி காப்பாற்றினார். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, பீஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நக்சலைட் தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. ராமர் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா. இது சீதாவின் மண், இங்கு பசுவதையை நாங்கள் ஏற்க மாட்டோம். பசுவதை மற்றும் பசுக் கடத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதே மோடியின் உத்தரவாதம். '' என கூறினார்.

Tags

Next Story