மோடி விரும்புவதை நான் சமைப்பேன்! மம்தாவின் சர்ச்சை பேச்சும்.. பாஜகவின் பதிலடியும்!

மோடி விரும்புவதை நான் சமைப்பேன்!   மம்தாவின் சர்ச்சை பேச்சும்.. பாஜகவின் பதிலடியும்!

மோடி Vs மம்தா 

பிரதமர் மோடிக்கு அவர் விரும்பும் உணவை சமைத்துக் கொடுக்க தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிட்டு தனது முகலாய மனநிலையை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். மோடியின் இந்தப் பேச்சுக்குப் பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் விரும்பினால் அவருக்கு மாட்டிறைச்சி சமைக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர் தான் சமைக்கும் உணவைச் சாப்பிடுவாரா என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

"நான் சிறுவயதில் இருந்தே நன்றாக சமைபேன். ஆனால் மோடி தாம் சமைத்து கொடுத்தால் அந்த உணவை ஏற்பாரா ? அவர் என்னை நம்புவாரா? அவர் விரும்புவதை நான் சமைப்பேன்" என்றார்.

''நான் சைவ உணவுகள் மற்றும் மீன் கறி போன்ற அசைவ உணவுகள் இரண்டையும் விரும்புகிறேன்'' எனக் கூறிய அவர், அதோடு, இந்து மதத்தில் பல்வேறு சமூகங்களால் பல்வேறு உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் உணவு பழக்கவழக்கங்கள் மீது பாஜக கட்டுப்பாடு விதிக்க விரும்புவதாக விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தலைவர் சங்குதேப் பாண்டா, மோடி சைவ உணவு உண்பவர் என்பதை நன்கு அறிந்த மம்தா பானர்ஜி வேண்டுமென்றே அவரை வம்புக்கு இழுக்கிறார் என்று சொல்கிறார். பிரதமரை அவமதிப்பதன் மூலம் சனாதானி இந்துக்களை மம்தா அவமதிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story