வெளியுறவுத்துறையை மீண்டும் கைப்பற்ற அமைச்சர் ஜெய்சங்கர் திட்டம்?

வெளியுறவுத்துறையை மீண்டும் கைப்பற்ற அமைச்சர் ஜெய்சங்கர் திட்டம்?

ஜெய்சங்கர்

வெளிநாட்டு தலைவர்களுடனான மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு வெளியுறவுத்துறையை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை வெளியுறவு துறையின் அமைச்சர்கள் தான் சந்தித்து பேசுவது வழக்கம்.

இதற்கிடையே துறை ஒதுக்காத நிலையில், வெளிநாட்டு தலைவர்களை ஜெய்சங்கர் சந்திப்பதால் வெளியுறவுத்துறையை மீண்டும் தக்க வைப்பது உறுதியாகி உள்ளது.

Tags

Next Story