வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்து களம் காண்கிறார் நரேந்திர மோடி !

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்து களம் காண்கிறார் நரேந்திர மோடி !

பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் களம் காண்கிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு 7-ம் கட்ட தேர்தலில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story