ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் தேர்வு!

ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் தேர்வு!

நயாப் சிங் 

ஹரியானாவின் புதிய முதலமைச்சர் ஆக நயாப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் இன்று(மார்ச்-12 ) காலை தனது பதவியை ராஜினாமா செய்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து ஒட்டுமொத்த அமைச்சரவையும் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது. இந்த ஆண்டின் இறுதியில் ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனோகர் லால் கட்டார் திடீரென இந்த முடிவை எடுக்க காரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஹரியானாவில் முதலமைச்சராக நயாப்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ -களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5 மணிக்கு அவர் பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நயாப்சிங் ஹரியானா மாநில பாஜக தலைவரும் குருசேத்ரா தொகுதி எம் பி.., யுமாக இருந்து வந்த நிலையில் தற்போது ஹரியானா முதலமைச்சர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தொகுதியுடன் உடன்பாடு எட்டப்படாததால் ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் பாஜக இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags

Next Story