தமிழ்நாட்டிலும் புதிய கல்விக் கொள்கையா?

தமிழ்நாட்டிலும் புதிய கல்விக் கொள்கையா?

 புதிய கல்விக் கொள்கை

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை என அமத்திய அமைச்சகம் அறிவிப்பு .

நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் இந்த கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாடு கேரளா உள்பட ஒரு சில மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் நடப்பு கல்வி ஆண்டில் 3 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது .

Tags

Next Story