புரூனே, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

புரூனே, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

modi

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனேவுடன் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 40-வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி அரசு முறை பயணமாக புரூனே செல்கிறார். வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் புரூனேயில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

புரூனே பயணத்தை முடித்து விட்டு 4-ந்தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கும் செல்கிறார். 5-ந்தேதி வரை சிங்கப்பூரில் இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு துறை சார்ந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Tags

Next Story